Banner Wishes

செய்திகள்

Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts

Saturday, February 23, 2013

தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1

போர் அடிக்குதா..? இல்ல வேலை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி,  செஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு  தான் நம்ம கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து  கொள்ளுங்கள்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Tuesday, January 8, 2013

கடத்தல்கார மியாவ்..மியாவ்..! சிறை பிடிப்பு!

பிரேசில்லா: பிரேசிலுள்ள  சிறையில்  கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். 

Thursday, January 3, 2013

டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த குழந்தை

நியூயார்க்: 

 அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார்.