Banner Wishes

செய்திகள்

Showing posts with label ஊர் சுற்றலாம் வாங்க. Show all posts
Showing posts with label ஊர் சுற்றலாம் வாங்க. Show all posts

Wednesday, April 10, 2013

திண்டுக்கல், தஞ்சை - நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்வு!!!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 8, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தளங்கள். ஒரு பார்வை:
பவானி சாகர் அணைக்கட்டு:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மணலால் கட்டப்பட்டது. சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. கடல்போல நீர் தேங்கித் ததும்பும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். 

Sunday, January 6, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - திண்டுக்கல் மாவட்டம்


வியத்தகு திண்டுக்கலின் வழிபாட்டுத் தளங்கள் - ஒரு பார்வை

அபிராமி அம்மன் கோயில் : 

திண்டுக்கல் நகரில் அருள் பாலிக்கும் அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையின்போது அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார்.....


Wednesday, January 2, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - முக்கொம்பு (திருச்சி மாவட்டம்)

முக்கொம்பு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும் .
காவிரி ஆற்றின் குறுக்கே  திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து  15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
      இது திருச்சிக்கு அருகே உள்ளது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன்  என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.
   குழந்தைகள் , பெரியவர்கள் , இளைஞர் அனைவருக்கும் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம்.விடுமுறை நாட்களில் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல சிறந்த இடம்.
இங்கு சுற்றிபார்க்க நுழைவுகட்டணம் = ரூ.5 
 நன்றி :விக்கிபீடியா