Banner Wishes

செய்திகள்

Showing posts with label மக்கள் விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label மக்கள் விழிப்புணர்வு. Show all posts

Monday, July 29, 2013

உஷார்!!! உஷார்!!! இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response Team India (CERT-In) என்ற அமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய ட்ரோஜன் வகையை  சார்ந்த Trojan win32 / Beebone (பீ போன்) வைரஸானது மிக வேகமாக இந்தியாவில் பரவிவருகிறது. இந்த  வைரஸ் பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் ஊடுருவ வழிவகுக்கும் தன்மை கொண்டது. 

CERT-In அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் (Auto Run)  வசதி மற்றும் தேவையில்லாத அப்டேட்களை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். 

Sunday, June 23, 2013

சுட்டிகளுக்கென பாதுகாப்பான தனி தேடு இயந்திரங்கள்

இணைய உலகில் கூகுளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்படும் கூகுள் தளத்தை (Google) நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள். இணையத்தில் தகவல்களைத் தேட நீங்களே பல முறை இந்தத் தேடு இயந்திரத்தைப் (சர்ச் இஞ்சின்) பயன்படுத்தி இருப்பீர்கள்.

கூகுள் போலவே வேறு பல தேடு இயந்திரங்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கு என்றே தனியாகத் தேடு இயந்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புத் தேடு இயந்திரங்களும் இருக்கின்றன.

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எளிமையானவை. சுட்டிகளுக்கு ஏற்ற வகையில் வண்ணமயமானவை கூட.

உணவு முறை - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட...

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். 

முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --1/2 கிலோ
வெந்தயம் ---1/4 கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

Monday, June 17, 2013

விகடனனின் "இன்ஜினீயரிங் கவுன்சிலிங் செல்வோர்க்காண A-z வழிகாட்டி"

பொறியியல் பட்டப்படிபிற்க்கான கலந்தாய்விற்கு செல்லும் மாணவ/மாணவிகளே,  கலந்தாய்வு பற்றிய சந்தேகங்களுக்கு A to Z எளிமையான வழிகாட்டி!

#.
வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

#. மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்

Saturday, April 13, 2013

நம்முடனே உடன்கட்டை ஏறும் நம் இணைய தகவல்கள் - கூகுள் புதிய வசதி

இன்றைய நவீன வலையுலகத்தில், நம்மில் பலரும் நமது தனிப்பட்ட மற்றும் சுயவிபரங்கள்  கோப்புகள்,புகைப்படங்களை பகிர்ந்து / சேமித்து வைத்துள்ளோம். ஒரு வேளை நாம் "இவ்வுலகிலே"  இல்லாத போது அல்லது நாம் இணைய உலகை விட்டு நிரந்தரமாக வெளிவரும் போது, இணையத்தில் உள்ள நம் மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும்..? என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. 

Monday, March 25, 2013

உணவே மருந்து - பைபாஸ் சர்ஜரி தவிர்க்க சிறந்த வழி

நண்பர்களே கவனியுங்கள்.!.!. இது உண்மைச் சம்பவம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Thursday, February 14, 2013

உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

Sunday, February 3, 2013

உணவு முறை - சூட்டை குறைக்கும் வெந்தயம்


நம் வாழ்வில் நமக்கு பயன்படும், அறியப்படும் சின்ன..சின்ன விஷயங்கள் யாவும் அற்புதமாகவே இருக்கிறது. உதாரணமாக ஒரு பெரிய கோபுரத்தை பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம்.

 நம் ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை,  சின்னச் சின்ன செயல்களை தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை பற்றி இனி  வரும் பதிவகளில் அறிந்து கொள்ளவோம்.  இந்தப் பதிவில் வெந்தயத்தின் பலனை பற்றி பார்க்கலாம்.

Thursday, January 24, 2013

உணவு முறை - மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

இன்றைய அதிவேக கால ஓட்டத்தில்,  நாம் உண்ணும் உணவுகளிலிருந்து நம் மூளை செயல்பட தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை, இதன் காரணமாக ஞாபக சக்தி குறைவு, கவனமின்மை போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

 ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

Wednesday, January 23, 2013

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 2


முந்தைய பதிவில் குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பதிந்திருந்தோம்.அதன் தொடர்ச்சி....

என்னவன்முறையாகுடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களாபெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரிநான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன்இது வன்முறையாஇல்லையா என்று பாருங்கள்.பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர்திண்டுக்கல்தேனிதர்மபுரிகிருஷ்ணகிரிஊட்டிதிருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறதுபுள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லைஇது ஒரு வன்முறையில்லையா?

Tuesday, January 22, 2013

இன்று - ஜன.23: சரித்திர நாயகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்


ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லைஅவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி என அழைக்கப்படும் "நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்ஆவார்.

யார் இந்த நேதாஜி...?


குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 1


குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள்அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாதுகுழந்தைகள் உலகம் மிக விந்தையானதுவேடிக்கையானதுவிநோதமானதுஎவராலும் எளிதாக நுழைய முடியாதுஅதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும்அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்லஅவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்லஅவர்கள் இயற்கையின் வெளிப்பாடுஉங்கள் எதிர்பார்ப்புகளைவிருப்பங்களைஎண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்ஏனென்றால் "ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.


Monday, January 21, 2013

உணவே மருந்து - சிவப்பு தக்காளி சூப்


உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.  தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.  வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.

டிரிங்..டிரிங் : 181 - பெண்களுக்கான ஹெல்ப்லைன்

தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவியின்  பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர். அதேவேளையில்,நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு பல்வேறு காரணிகளை செய்து வருகிறது. அவற்றுள்  மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவ, ஹெல்ப்லைன் எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆபத்தான காலங்களில் "181" என்ற எண்ணை பெண்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல்  இச்செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபல் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத உள்ளார். 

Tuesday, January 8, 2013

ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?


காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.

உணவே மருந்து - கைக்குத்தல் அரிசியின் பயன்


அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!


எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம். 

Monday, January 7, 2013

கழுத்துவலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்


கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன  வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது,  எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து  பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.

Sunday, January 6, 2013

Fight Back : இந்தியாவின் முதல் பெண்கள் பாதுகாப்புகான மொபைல் பயன்பாட்டு மென்பொருள்

(To read this article in English...)

 என்  உடன்பிறவா சகோதரிகளே..! "மனதை ரணமாக்கிய" செயல்பாடுகளால் தனியே செல்ல பயப்படுகிறாயா? அல்லது வீட்டின் உள்ளே அடைந்து இருப்பதே பாதுகாப்பு என நினைககிறாயா? எத்தனை நாட்களுக்கு? இது போராட வேண்டிய நேரம்ஒரு பதிவர் என்ற முறையில், உன் பாதுகாப்புக்கு உதவும் ஒரு மொபைல் பயன்பாட்டு மென்பொருளை (mobile app) பற்றி பதிவிடுகிறேன்.
இதன் வழி  நீ தன்நம்பிக்கையுடன் சாலையில் நடக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

FightBack: பெண்கள் பாதுகாப்பு மென்பொருள், இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்இது உங்கள் கைபேசியில் இருந்து SOS எச்சரிக்கைகள் அனுப்புகிறது. நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவிக்க ஜிபிஎஸ்(GPS), எஸ்எம்எஸ்(SMS), வரைபடங்கள்(Map), ஜிபிஆர்எஸ்(GPRS), மின்னஞ்சல்(EMail) மற்றும் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்துகிறது