Banner Wishes

செய்திகள்

Showing posts with label ஆச்சரியம். Show all posts
Showing posts with label ஆச்சரியம். Show all posts

Saturday, May 18, 2013

மீண்டும் ஒரு காதல் சின்னம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.

Saturday, February 23, 2013

தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1

போர் அடிக்குதா..? இல்ல வேலை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி,  செஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு  தான் நம்ம கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து  கொள்ளுங்கள்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். 

Tuesday, January 8, 2013

கடத்தல்கார மியாவ்..மியாவ்..! சிறை பிடிப்பு!

பிரேசில்லா: பிரேசிலுள்ள  சிறையில்  கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். 

Monday, January 7, 2013

பெண்களுக்கான "ரோபோ" செருப்பு - ஒரு மிதிக்கு 'எலக்ட்ரிக் ஷாக்', 2 மிதிக்கு 'எஸ்.எம்.எஸ்'


தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. 

Thursday, January 3, 2013

டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த குழந்தை

நியூயார்க்: 

 அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார்.