Banner Wishes

செய்திகள்

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, July 22, 2013

60வது பிலிம்பேர் விருதுகள் முழு விபரம்

தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

Sunday, June 23, 2013

சுட்டிகளுக்கென பாதுகாப்பான தனி தேடு இயந்திரங்கள்

இணைய உலகில் கூகுளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்படும் கூகுள் தளத்தை (Google) நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள். இணையத்தில் தகவல்களைத் தேட நீங்களே பல முறை இந்தத் தேடு இயந்திரத்தைப் (சர்ச் இஞ்சின்) பயன்படுத்தி இருப்பீர்கள்.

கூகுள் போலவே வேறு பல தேடு இயந்திரங்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கு என்றே தனியாகத் தேடு இயந்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புத் தேடு இயந்திரங்களும் இருக்கின்றன.

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எளிமையானவை. சுட்டிகளுக்கு ஏற்ற வகையில் வண்ணமயமானவை கூட.

Monday, June 17, 2013

விகடனனின் "இன்ஜினீயரிங் கவுன்சிலிங் செல்வோர்க்காண A-z வழிகாட்டி"

பொறியியல் பட்டப்படிபிற்க்கான கலந்தாய்விற்கு செல்லும் மாணவ/மாணவிகளே,  கலந்தாய்வு பற்றிய சந்தேகங்களுக்கு A to Z எளிமையான வழிகாட்டி!

#.
வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

#. மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்

Thursday, June 13, 2013

160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வருகிறது

செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில்,  தந்தி சேவையை  வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

Saturday, June 8, 2013

கூகுள் மற்றும் பேஸ்புக்கை உளவு பார்க்கும் அமெரிக்கா...

கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன என அமெரிக்கா கவலையுற்றுள்ளது. 

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Saturday, May 18, 2013

மீண்டும் ஒரு காதல் சின்னம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.

Wednesday, May 8, 2013

+2 தேர்வு முடிவுகள் - இணையதளங்கள், எஸ்.எம்.எஸ் விபரங்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,  காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதனை ஒட்டி  தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அறிவித்தார். கலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் பின்வருமாறு:
அரசு இணையதளங்கள்:
பிற இணையதளங்கள்:
மேலும்,  பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு "TNBOARD <REGISTRATION NO><DOB>" என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையம்('நிக்'), மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

Saturday, April 13, 2013

நம்முடனே உடன்கட்டை ஏறும் நம் இணைய தகவல்கள் - கூகுள் புதிய வசதி

இன்றைய நவீன வலையுலகத்தில், நம்மில் பலரும் நமது தனிப்பட்ட மற்றும் சுயவிபரங்கள்  கோப்புகள்,புகைப்படங்களை பகிர்ந்து / சேமித்து வைத்துள்ளோம். ஒரு வேளை நாம் "இவ்வுலகிலே"  இல்லாத போது அல்லது நாம் இணைய உலகை விட்டு நிரந்தரமாக வெளிவரும் போது, இணையத்தில் உள்ள நம் மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும்..? என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. 

Wednesday, April 10, 2013

திண்டுக்கல், தஞ்சை - நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்வு!!!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 26, 2013

சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் "OUT"

 "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை,  போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். 

இதை அடுத்து, இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

Sunday, March 24, 2013

சிறந்த 100 விசை பலகை விசைகள்(Shortcut Keys)



100 Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C - (Copy)
2. CTRL+X - (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)

Saturday, March 16, 2013

பரதேசி - பாலாவின் வெற்றி படைப்பு

பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலைத் தோட்டத்தில்  அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலியை தாங்கி வெளிவந்திருக்கும் இயக்குனர் பாலாவின் படைப்பு.

கதையானது  1939ம் ஆண்டுதென்தமிழ்நாட்டில் இருக்கும் சாலூர் எனும் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அக்கிராமத்தில் தண்டோரா போட்டு சேதி சொல்லி பிழைப்பு நடத்தும் ஒட்டு பொறுக்கி (எ) ராசா (அதர்வா), தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் அவ்ஊரிலே வசிக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா) சற்று எல்லை மீறிய காதல். இதன் விளைவாக ங்கம்மா கர்ப்பமடைகிறாள். தன் காதலியை கைப்பிடிக்க, நல்ல பிழைப்பைத் தேடி, பயணப்படுகிறார் ராசா.........

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Thursday, February 14, 2013

உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். 

Wednesday, February 6, 2013

கேப்டனை கலாய்த்து சட்டசபையில் சொல்லப்பட்ட குட்டிக் கதை!


தமிழக முதல்வர் அவர்கள் விழாக்களில், சட்டசபையில் பேசும்போதும் குட்டிக் கதைகளை கூறுவார். ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தை கதையின் மூலமாக, விளக்கினால், அது மக்களை எளிதாக சேரும் ,கவரும் என்பதால், இந்த பாணியை கடைபிடித்து வருகிறார்.

அவரது பாணியை, அப்படியே அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அக்கதையாவது:

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!

"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.

Tuesday, February 5, 2013

விஸ்வரூபம் - நீக்கப்பட்ட காட்சிகள் விபரம்

பல்வேறு தடைகள் , சிக்கல்களை கடந்து, ஒரு வழியாக  வருகிற பிப். 7ம்தேதி விஸ்வரூபம் திரைக்கு வரும் என்று உறுதியாகியுள்ளது. 

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது.  அவை பின்வருமாறு:

Sunday, February 3, 2013

உணவு முறை - சூட்டை குறைக்கும் வெந்தயம்


நம் வாழ்வில் நமக்கு பயன்படும், அறியப்படும் சின்ன..சின்ன விஷயங்கள் யாவும் அற்புதமாகவே இருக்கிறது. உதாரணமாக ஒரு பெரிய கோபுரத்தை பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம்.

 நம் ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை,  சின்னச் சின்ன செயல்களை தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை பற்றி இனி  வரும் பதிவகளில் அறிந்து கொள்ளவோம்.  இந்தப் பதிவில் வெந்தயத்தின் பலனை பற்றி பார்க்கலாம்.