Banner Wishes

செய்திகள்

Tuesday, January 8, 2013

கடத்தல்கார மியாவ்..மியாவ்..! சிறை பிடிப்பு!

பிரேசில்லா: பிரேசிலுள்ள  சிறையில்  கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். 

பூனை சிறைக்குள் செல்லும் போது, அதை லாவகமாக பிடித்தனர். அதன் வயிற்று பகுதியில் மொபைல் போன், துளையிடும் கம்பிகள், இரும்பை அறுக்கும் ரம்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் இருந்த கைதிகள், இந்த பூனையை சில பொருட்களை எடுத்து வரும் வகையில் பழக்கியுள்ளனர். 

இருப்பினும் பூனை கொண்டு வந்த பொருட்களை பயன்படுத்தி, கைதிகள் யாரும் தப்பித்து செல்லவில்லை. தற்போது இந்த பூனையும் சிறை வைக்கப்பட்டுள்ளது.
பதிவு பிடித்திருந்தால் "கமெண்ட்" பண்ணுங்க.
நன்றி  - தினமலர்

No comments:

Post a Comment