Banner Wishes

செய்திகள்

Wednesday, January 2, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - முக்கொம்பு (திருச்சி மாவட்டம்)

முக்கொம்பு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும் .
காவிரி ஆற்றின் குறுக்கே  திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து  15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
      இது திருச்சிக்கு அருகே உள்ளது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன்  என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.
   குழந்தைகள் , பெரியவர்கள் , இளைஞர் அனைவருக்கும் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம்.விடுமுறை நாட்களில் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல சிறந்த இடம்.
இங்கு சுற்றிபார்க்க நுழைவுகட்டணம் = ரூ.5 
 நன்றி :விக்கிபீடியா

No comments:

Post a Comment